Pages

sai yoga centre

sai yoga centre

Saturday, December 24, 2011

நீங்கள் பாக்கியசாலிகள்!



* நல்லவர்கள் பிறருடைய நன்மைக்காக வாழ்கின்றனர். உனக்கு நான் நன்மை செய்வதன் மூலமாக என்னுடைய நன்மையை நான் பெறமுடியும். இதைத்தவிர வேறு வழி இல்லை.


* தூய்மையாக இருப்பதும், மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் அனைத்து வழிபாடுகளின் சாரம்.


* இறைவனுக்கு உதவுவதாக எப்போதும் சொல்லாதீர்கள். அவருக்காக பணியாற்றும் பேறு பெற்ற நாம் பாக்கியசாலிகள் ஆவோம்.


* நாய்க்கு சோறு கொடுக்கும் போது, அந்த நாயையும் கடவுளாகக் கருதி வழிபடு. ஏனெனில், அந்த நாயினுள்ளும் கடவுள் இருக்கிறார். அவரே எல்லாமுமாய் இருக்கிறார், எல்லாவற்றிலும் இருக்கிறார்.


* ஏழைகளிடம் சிவபெருமானைக் காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுபவன் ஆகிறான். விக்ரகத்தில் சிவனை வழிபடுவது ஆரம்பநிலை தான்.


- விவேகானந்தர்

No comments:

Post a Comment