உடலை எரிக்கப் பயன்படுவது மயானம்; மனதை எரிக்கப் பயன்படுவது தியானம்-இளையராஜாவெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது என்ற தனது புத்தகத்தில் தியானம் பற்றி.
————————————————————————–
கடவுள் பக்தி உள்ளவர்தாம் தியானம் செய்ய வேண்டுமா என்றால் இல்லை. தியானம் என்றால் நினைவுகளை ஒருங்கிணைப்பது; எண்ணங்களை இல்லாமல் செய்வது, மனதை ஒருங்குவிப்பது எனச் சொல்லலாம்.
கடவுள் பக்தி உள்ளவர்தாம் தியானம் செய்ய வேண்டுமா என்றால் இல்லை. தியானம் என்றால் நினைவுகளை ஒருங்கிணைப்பது; எண்ணங்களை இல்லாமல் செய்வது, மனதை ஒருங்குவிப்பது எனச் சொல்லலாம்.
கண்களை மூடிக்கொண்டு உலகை கவனி
கண்களைத் திறந்திருக்கும்போது உலகை மற!
என்ற ஆங்கிலப் பழமொழி தியானத்திலிருந்தே வந்திருக்கும் .
கண்களைத் திறந்திருக்கும்போது உலகை மற!
என்ற ஆங்கிலப் பழமொழி தியானத்திலிருந்தே வந்திருக்கும் .
தியானம் என்றால் ஆழ்நிலைத்தியானமா? சூழ்நிலைத் தியானமா? ஈஷாவா? வேதாத்திரியா? ரவிசங்கரா? என்றெல்லாம் கேட்பவ்ர்கள் தியானத்தைப்பற்றி ஏதும் அறியாதவர்கள். தியானம் செய்வது பற்றி எல்லா மதங்களையும் விட இந்து மத நூல்களில் பகவத் கீதை; உபநிஷத்துக்கள் போன்ற வற்றில் அதிகம் சொல்லப்பட்டிருக்கிறது.
நினைவு என்ற ஒன்றை நீக்கிப் பார்க்கின்ற போது மனம் என்ற ஒன்றில்லை – ரமணர்.
நீ கடவுளை நோக்கி ஓரடி எடுத்துவைத்தால் அவர் ஈரடி உன்னை நோக்கி எடுத்து வைக்கிறார்-ராமகிருஷ்ணர்.
மனஸ் என்றால் அசைந்துகொண்டிருப்பது என்கிறது சம்ஷ்கிருத மொழி.
நீ கடவுளை நோக்கி ஓரடி எடுத்துவைத்தால் அவர் ஈரடி உன்னை நோக்கி எடுத்து வைக்கிறார்-ராமகிருஷ்ணர்.
மனஸ் என்றால் அசைந்துகொண்டிருப்பது என்கிறது சம்ஷ்கிருத மொழி.
உலகிலேயெ மிக உயர்ந்தது எது என்றால் அது: தியானம்
உலகிலேயே மிக சிறந்தது எது என்றால் அது: தியானம்
அனைவர்க்கும் மிக அவசியமானது எது என்றால் அது: தியானம்.
உலகிலேயே மிக சிறந்தது எது என்றால் அது: தியானம்
அனைவர்க்கும் மிக அவசியமானது எது என்றால் அது: தியானம்.
மிருகங்களும், விலங்குகளும், தாவரங்களும் கூட சிரிப்பதை, சிந்திப்பதை, சிலிர்ப்பதை அறிவியல் சொல்கிறது. ஆனால் தியானம் ஒன்றுதான் மனிதர்க்குக் கிடைத்த அரிய வரம். ஒவ்வொருவரின் வாழ்வையும் தியானத்துக்கு முன்/ தியானத்துக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம்.
தியானம் என்பது தேவையில்லாத பகுதிகளை செதுக்கி வாழ்வை அழகிய சிலையாக மாற்றுவது; தியானம் என்பது குரோட்டன்ஸ் செடியின் அளவற்ற அடர்த்தியை வெட்டி அழகாக மாற்றுவது போன்றது. தியானம் என்பது ஒரு செடியோ மரமோ தடை மீறி சூரியஒளியை நோக்கி வலைந்து வளர்ந்து செல்வது போன்று வாழ்வை செலுத்துவது.
ரமண மஹரிஷி அழகாக சொல்வார்: அளவற்ற நூல்களைப் படிப்பதால் பயனில்லை (ஏன் என்றால்) எல்லா நூல்களிலுமே இறுதியாக மனோநிக்ரஹமே வழி என்று சொல்லப்பட்டிருக்கிறபடியால். (மனசின் ஆர்ப்பாட்டதை அடக்குவது நினைவைப் பிரித்து மனம் என்ற ஒன்று இல்லாமலிருப்பதை கண்டுகொல்வது.)அளவற்ற நூல்களைப் படிப்பதால் பயனில்லை என்பார்.
தியானம் என்பதன் அடிப்படையில் “தனியிடத்தில் அமர்ந்தவனாகி” என்ற சொல் கீதை போன்ற பழம் பெரும் நூலில் உண்டு. இதை ஒப்பு நோக்குகையில் கூட்டம் கூட்டிக்கொண்டு தற்போது இவர்கள் சொல்வதும் செய்வதும் தொடர்பில்லாமல் நடப்பதும் உமக்கு விளங்கும்.
இவர்கள் எல்லாமே நானும் கூட “சர்வ சமய தியான வழி வாழ்வு முறை” என்று குரான், பைபிள்; பௌத்தம்; சமணம்; கீதை எல்லாம் சேர்த்து பயிற்சி கொடுத்துவருகிறேன் எனினும் இதற்குஎல்லாம் யாரும் காரண கர்த்தாவல்ல. அனைவரும் கற்றுக்கொண்ட வழித்தடத்தை காணிக்கையாக்குகிறார்கள் எந்தக் கொடித்தடம் யார் யாருக்கு பிடிக்கிறதோ அதன் வழி மக்கள் பயணப்படுகிறார்கள் கட்சிகள் போல.
பொதுவாக யோகப்பயிற்சியில் 4 வகையான யோகம் இடம்பெற்றிருக்கின்றன.:
1.மந்திர யோகம்: மந்திர உச்சரிப்புகள், ஜெபம், பிரார்த்தனைகள்; பாடல்கள் வழியே கடவுள் மார்க்கம் தேடுவது. இதன்வழிதான் காந்தி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
1.மந்திர யோகம்: மந்திர உச்சரிப்புகள், ஜெபம், பிரார்த்தனைகள்; பாடல்கள் வழியே கடவுள் மார்க்கம் தேடுவது. இதன்வழிதான் காந்தி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. இலய யோகம்: உலகில் உள்ள எல்லாமே இயற்கையின் ஒரு அம்சமே, மனிதனும் இயற்கையின் ஒரு சிறு துகளே. என்று எல்லாவற்றையும் இறை அம்சத்தில் பார்த்து வியப்பது இலயித்துக் கிடப்பது.ஒரு பைத்யக்கார நிலை என்று கூட சொல்லலாம்.
3. ஹடயோகம்: ஆசனம், சக்ரா, கிரியைகள், முத்திரைகள் எல்லாம் தியானத்துக்கு ஏதுவாக ஒரு உபகரணமாக ஒரு கருவியாக தயார்படுத்தி வைப்பது – இராமதேவ் பாபா இவ்விஷியத்தில் கில்லாடி.எண்ணற்ற ஆசனங்கள் இதில் அடங்கும். ஏன் நடனத்தையே கூட இதில் சேர்க்கலாம். நாட்டிய வழியில் கூட ஆன்மாவோடு இலயித்தல் இருக்கலாம்.
4. இராஜ யோகம்: நீ உண்மையிலேயே உனது உடலைக் கடந்து உயிரோடு – ஆன்மாவோடு கலக்க வேண்டுமானால் அதற்கு இந்த வழிதான் இந்த யோகப் பயிற்சிதான் சிறந்தது. இதை அஷ்டாங்க யோகம் என்றும் சொல்வார்கள் இதுவே நம் வழி திறப்பு விழி.
விவேகானந்தர், இராமகிருஷ்ணர்; அரவிந்தர் ஏன் இன்றைய சித்பவானந்தர் வரை அவரவர்கள் அவரவர்கள் பாணியில் இக்கலையை நமக்குப் பகிர்ந்து கொடுத்துச் சென்றிருக்கிறார்கள். எது நன்றாக இருக்கிறதொ? எப்பகுதி சுலபமாக இருக்கிறதோ? எவ்வழி பிடித்திருக்கிறதோ? அதன் படி நாம் பயணம் செய்ய…

No comments:
Post a Comment