Pages

sai yoga centre

sai yoga centre

Saturday, December 24, 2011

கடைசி பருக்கையையும் கொடு!

* இறைவனுக்கு பணி செய்ய விரும்புபவர் மக்களுக்கும், உலக உயிர்களுக்கும் பணி செய்ய வேண்டும். ஈசனுக்கு தொண்டு செய்பவரே உத்தமத் தொண்டராவார்.
* ஏழைகளிடமும், பலமற்றவர்களிடமும், நோயுற்றவர்களிடமும் இறைவனைக் காண்பவனே இறைவனை உண்மையாக வணங்குபவனாவான்.
* கோயிலில் இறைவனை வணங்குபவனிடம் அடையும் மகிழ்ச்சியை விட, ஏழைக்கு பணி செய்பவனிடம் இறைவன் அடையும் மகிழ்ச்சி மேலானதாகும்.
* புண்ணியத்தலங்களை தரிசித்தவனிடம் தன்னலம் இருந்தால், இறைவன் அவனிடம் மிகத்தொலைவிலேயே இருப்பான். தன்னலத்தை மறந்து பொதுநலத்துடன் வாழ வேண்டும்.
* மனத்தளர்வு வெற்றிகரமான வாழ்வுக்கு வழிவகுக்காது. உறுதியோடும், இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதுவே மேலான நன்மையை பெறவைக்கும்.
* பிறருக்கு வழங்கவே கையை இறைவன் படைத்தான். பட்டினியாக கிடந்தாலும் கடைசிப் பருக்கையையும் பிறருக்குக் கொடு. பிறருக்கு வழங்குவதால் நீ முழுமையடைவதுடன், தெய்வமாகவும் மாறுவாய்.
-விவேகானந்தர்

No comments:

Post a Comment