Pages

sai yoga centre

sai yoga centre

Saturday, December 24, 2011

தவறுகளையும் வாழ்த்து!

* இரக்கத்தால் பிறருக்கு நன்மை செய்வது நல்லது. ஆனால் இறைவனின் படைப்பான அனைத்து உயிர்களுக்கும் பணி செய்வது மிக நல்லது.
* மனித வடிவம் கொண்ட அனைத்து உயிரையும் வழிபடுங்கள், இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்.
* விருப்பத்திற்கும், கோபத்திற்கும் அடிமையானால், உண்மையான சுதந்திரத்தின் இன்பத்தை உணர முடியாது என்பதால், அவற்றை தவிர்ப்பது நல்லது.
* கடவுளின் குழந்தைகளாகிய மனிதர்களுக்குத் தொண்டு செய். மனிதர்களுக்கு தொண்டு செய்வதன் மூலம் கடவுளுக்கு தொண்டு செய்தவனாகிறாய்.
* கடவுள் மீது நம்பிக்கை வைத்து துன்பப்படுபவர்களுக்கு இரக்கம் காட்டினால் உங்களுக்குத் தேவைப்படும் உதவி நிச்சயம் வந்தே தீரும்.
* நீ செய்த தவறுகளை வாழ்த்து. அந்தத் தவறுகள், நீ அறியாமலேயே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.
- விவேகானந்தர்

No comments:

Post a Comment